வீட்டில்
வன்முறை செய்பவன்தான்
வீதியிலும் செய்கிறான்

ஒவ்வொரு
வன்முறையிலும்
ஒரு தாயேனும் அழுகிறாள்

ஒவ்வொரு
தாயின் கையிலும்
வன்முறையைக்
கழுவித் துடைக்கும்
துடைப்பம் இருக்கிறது

*
வன்முறைக்கு
இரு வழிகள்

ஒன்று
குத்து வெட்டு

இரண்டு
நரம்பிலா நாவினால்
சுடும்புண்

கடுஞ் சட்டமும்
செயலாற்றும் ஆட்சியும்
இரண்டையும் ஒழிக்கும்

யாரும் யாரையும்
விரும்பவும் செய்யலாம்
வெறுக்கவும் செய்யலாம்

உன் வெறுப்பால்கூட
யாருக்கும்
யாதொரு பாதகமுமில்லை




No comments: