பொங்கல் நாளில்...

நண்பரின் கருத்து:

மாட்டுவண்டிச் சவாரிக்கு பின் காளைகள் சீழ் பிடித்து, நோய்வாய்பட்டு எப்படி இறக்கின்றன என்பதை கண்ணால் பார்த்தவன் நான்

என் மறுமொழி:

அது தாறுமாறாய்த் தண்ணியடித்துவிட்டு கொடியி மிருகமாய் மாட்டு வண்டியைப் பயன்படுத்திய வக்கிரக்காரனின் இழிச் செயலால்.

தன் சொந்தப் பிள்ளைபோல் மாடுகளைக் காப்பவனே உழவன். உழவன் ஒருபோதும் மாட்டிற்குத் தீங்கு செய்யமாட்டான்.

நான் கிராமங்களில் வாழ்ந்தவன். மாடுகளை காலை எழுந்தவுடன் தடவிக்கொடுத்து முத்தமிடும் பல்லாயிரம் உழவர்களைக் கண்டிருக்கிறேன்.

மாடுகள் கதறினால் நடு இரவிலும் உறக்கத்திலிருந்து வீறிட்டு எழுந்து மாடுகளைக் கண்காணித்து நல்லது செய்பவனே கிராமத்தான்.

பெத்த பிள்ளைகளைவிட அதிகம் அன்பு பாராட்டுவார்கள் காளையிடமும் பசுவிடமும் உழவர்கள்.

இது என் அனுபவம்

அன்புடன் புகாரி

No comments: