பொங்கல் ஏன்?

உலக உயிரினங்கள் வாழ உணவே முதல் அவசியம். உழவர்களே அத்தொழில் செய்பவர்கள்.

அவர்களளைச் சாதி மதம் இனம் மொழி நாடு கடந்து பார்க்க வேண்டும்.

அவர்கள் எல்லா மதங்களிலும் எல்லா இனங்களில் எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் உள்ளனர்.

அவர்கள் இல்லையேல் உலகம் அழிந்துபோகும்.

அவர்களுக்கும்....

அவர்களுக்குத் துணை நிற்கும் நிலம் நீர் காற்று நெருப்பு வானம் ஆகிய அனைத்து பஞ்ச பூதங்களுக்கும்...

கால்நடைகளுக்கும்

(இன்று உழவு இயந்திரங்களையும் நீரெடுத்துப் பாய்ச்சும் இயந்திரங்களையும் இன்னும் உழவுக்குப் பயன்தரும் அனைத்து இயந்திரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்)

நன்றி சொல்லும் நல்ல நாளே

பொங்கல் திருநாள்.

அவர்களைக் கொண்டாடுவோம்,

அவர்களுக்குத் துணை நிற்கும் அனைத்தையும் பாராட்டி நன்றிகூறி கொண்டாடுவோம்.

அந்த நன்றி இல்லாதவன் மனிதனா?

மாடுகூட இல்லை!

ஆகவே...

மனித குலத்துக்கே பொங்கல்

மிக மிக அவசியமான ஒரே பெருநாள் என்பேன்

No comments: