அதிகாரிங்களுக்கும்
அரசியல்வாதிங்களுக்கும்
கெடைச்சாச்சு

காவல்காரங்களுக்கும்
கலப்படக்காரங்களுக்கும்
கெடைச்சாச்சு

பணக்காரங்களுக்கும்
பிச்சைக்காரங்களுக்கும்
கெடைச்சாச்சு

அட
எனக்கும் கெடைச்சாச்சு
உனக்கும் கெடைச்சாச்சு

இந்தியாவுக்குக் கிடைக்கலயாமே
இன்னுமே சுதந்திரம்?

வெள்ளையன் பட்டியிலேர்ந்து
மீட்டுக்கிட்டு வந்த குட்டியாட்டை
நம்ம வீட்டு பிரியாணிக்கின்னு
கட்டிவெச்சுட்டமாமில்ல

நீயே சொல்லு...

நூறு ரூவா லஞ்சம் கொடுத்து
குறுக்கு வழியில சாதிக்கும்போது
செல்லாத ஒத்தைச் காசா
இந்தியாவை ஆக்கிடறோம்னு
நமக்குத் தெரியாதா

சிறு லஞ்சம்
பெரு ஊழல்

இந்தியாவுக்குச்
சுதந்திரம் எப்போ?

No comments: