நிழலைத் தேடியே
ஓடிடும் ஓட்டம்
இருளில் நின்று
தேம்பித்தான் விம்மும்

கனவின் கால்களில்
கட்டுகள் ஏது

நினைவின் முதுகில்
பாரங்கள் ஏது

நிஜத்தை நினைத்தால்
நிம்மதி இருப்பதில்லை

விலகிப் போய்விட
விருப்பம் வருவதில்லை

மறந்த திசைகளில்
பயணங்கள் தொடங்கு

விரிந்து வரவேற்கும்
வெளிச்சத்தின் கீற்று

No comments: