கடவுள் மாறிவிட்டாரா?

ஒருவர்
மதம் மாறினால்
அவர் கடவுளை
மாற்றிக்கொண்டதாக
நினைக்கிறார்

கடவுள்
ஒருவர் என்றால்
அவர் எப்படி மாறுவார்

செல்லும்
மார்க்கம்தான்
மாறும்

எல்லா நதிகளும்
கடலுக்கே

ஆனால்
அது செல்லும் வழியைச்
செம்மையாக்குவதே
மனதிற்கு
ஏற்றதாக்குவதே
வாழ்விற்கு
உகந்ததாக்குவதே
மதமாற்றம்

அன்புடன் புகாரி

No comments: