ஸ்ருதி மணநாள்

திருநெல்வேலி திருநிறைச் செல்வன்
கார்த்தி கார்த்தி
உன்
பருவ ஆகாயத்தில்
பறந்து வந்தாள்
ஒரு பட்டு நிலா
அவள்
தாளலயம் கூட்டி
ராக மழை சிந்தும்
ஸ்ருதி ஸ்ருதி
*
வானம் வையம் நெடுகிலும்
நறுமண மலர்கள் தூவி
என் நெஞ்சின்
நிறைவான வாழ்த்துகள்
குற்றாலம் வற்றலாம்
வற்றாது உங்கள் தேனருவி
கார்முகில் கலையலாம்
கலையாது உங்கள் கனவுகள்
வானவில் நிறம்மாறலாம்
மாறாது உங்கள் காதலுயிர்
வானச் சூரியனும் அணையலாம்
அணையாது உங்கள் வாழ்க்கைத்தீபம்
அன்று
தகவலும் புறாவும்போல
இன்று
செல்பேசியும் செவியும்போல
அன்று
வனமும் வேட்டையும்போல
இன்று
முகநூலும் லைக்கும்போல
அன்று 
கவிதையும் அரசவையும் போல
இன்று
கூகுளும் தேடமும் போல
அன்று
அறிவிப்பும் முரசும்போல
இன்று
வாட்ஸப்பும் ஃபார்வர்டும்போல
காலத்திற்கேற்ப
காதல் வாழ்வைப்
புதிப்பித்துக்கொண்டே
வாழ்க வாழ்க
பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு
நீக்கமற நிறைந்த நிம்மதிச் செல்வத்தோடு
கனவோடு நிறைவோடு கலையாத அன்போடு
வாழ்க வாழ்க
- அன்புடன் புகாரி
(அமெரிக்காவில் அழகாக நடந்த கார்த்திக் + ஸ்ருதி திருமண வரவேற்பில் நெஞ்சம் நிறைந்ததால் நிரம்பி வழிந்த வாழ்த்துச் சொற்கள்)

No comments: