201111 நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன் (2)

நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்
நம் நீதி நாளின் அதிபதியே

அவன் ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்பவனில்லை
யா அல்லாஹ் நீயே!

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லாயிலாஹா இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வளில்லாஹ் இல்ஹம்த்

ஈர மண்ணில் ரூஹை ஊதி உயிரைத் தந்தானே
வாழ்வதற்கு வானம் பூமி அமைத்து வைத்தானே
மனப் பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தான்
அந்த மார்க்கத்தை ஏற்பதற்கு நபியை ஈந்தான்

ஒரெழுத்தும் கற்றிடாத உம்மி நபியை
ஹிராவில் இக்ராஹ் என ஓதச் செய்தான்
குர்’ஆன் வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஆற்றல் தந்தான்
அந்த வேதமே மனிதனுக்குப் பாதையாக்கினான்

தனக்கான தேவை  இல்லாதவன்
நம் தேவை தீர்க்கும் வல்லோனவன்
அவன் அகிலத்தின் அருளாக நபியைத் தந்தான்
நபி வழியே இஸ்லாம்

ஆதாம் ஹவ்வா இருவரையும் படைத்துச் சேர்த்தவன்
அவர்கள் வழி மனித இனம் பெருகச் செய்தவன்
நாம் மற்றவரை அறிவதற்கு வேற்றுமை கலந்தான்
உயர்ந்தோர் நம்மிடையே அவனை உணர்ந்தோர் என்றான்

இன்னல்களும் இன்பங்களும் நேரும் வாழ்விலே
நேரடியே தன்னை நாட நீதி விதித்தான்
அகில உலகமெங்கும் அடங்கும் யாவும் உரியவன்னல்லாஹ்
யாவும் தன்னிடமே திரும்பிட விதி செய்தான்

இசை - முபீன்
பாடல் - அன்புடன் புகாரி
பாடகர் - எர்பானுல்லாஹ்
அரபிக் கோரஸ்    - முஹமது அலி, ரஷித், அஜிஸ், மலேசியா முஹமது அலி, அன்சாரி, அப்துல்லாஹ், பராஸ், பைசல், மஹ்புஸ் & சலாம் எக்ஸ்பிரஸ்
முகப்பு ஓவியம் - நசிருதீன் மாலிக்

(நான் அனுப்பி வைத்த இறுதிப் பாடல் வரிகள்)

No comments: