201206 நெல்லை சந்திப்பு சினிமா பாடல்

விழிகளில் உதிருதே கனவும் துளியாக
உயிருமே சிதறுதே மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியே
    இவன் சிலுவை என்றானால்
அந்த கடவுள் கூட சிறையிலே 
    ஒரு கைதியாவானோ
            ...விழிகளில் உதிருதே


உண்மை இங்கே ஊனமோ
   கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
   முழு நிலவின் கற்பும் ஏலமோ



விதி செல்லும் பாதை மாயம்
  அதன் காலில் இவன் ஜீவன்

இவன் கூடு எங்கே கிளிகள் எங்கே
   வாழ்ந்த வாழ்வெங்கே
போதும் இது போதும்
   இந்தத் துன்பச் சுமை போதும்     
                              ...விழிகளில் உதிருதே

கலைந்து மாறும் காட்சியோ
   நிஜம் புதைந்துபோகும் சாட்சியோ
மாயம் நியாயம் ஆனதோ
   இவன் தெய்வம் தூங்கிப் போனதோ

கடல் நீரைப் போல கண்கள்
   அதில் கரையும் கனவுகளே
இவன் கனவு எங்கே காதல் எங்கே 
    உறவின் வாழ்வும் எங்கே

போதும் இது போதும்
   இந்த மரண நிழல் போதும்



==========================
பழசு:

விழிகளில் உதிருதே உயிரும் துளியாக
கனவுகள் சிதறுதே மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியே
    இவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் இருளிலே
    மனித வாழ்வு என்னாகும்
            ...விழிகளில் உதிருதே

உண்மை இங்கே ஊனமோ
   கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
   கவரி மானின் கற்பும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
   அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
   வாழ்ந்த வாழ்வெங்கே
போதும் இது போதும்
   இந்தத் துன்பச் சுமை போதும்     
                              ...விழிகளில் உதிருதே

தாழை மடலோ தீயிலே
   தாய் ஜீவன் சருகாய் சாயுதே
காலம் கோலம் போடுதே
   கண் நீரும் கடலை மூடுதே

சிறு ஓடைத் தென்றல் மீது
   சுனாமி மோதுவதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
   வாழ்ந்த வாழ்வெங்கே
போதும் இது போதும்
   இந்தத் துன்பச் சுமை போதும்     
                              ...விழிகளில் உதிருதே

=======================

உண்மை இங்கே ஊனமோ
கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
முழு நிலவின் கருவும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
வாழ்ந்த வாழ்வெங்கே

போதும் இது போதும்
இந்த துன்பச் சுமை போதும்          
                             
*

விழிகளில் உதிருதே வலியும் துளியாக
உயிருமே சிதறுதே மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியில்
அவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் விதியிலே
இவன் வாழ்வு என்னாகும்
           
*

தாழை மடலோ தீயிலே
தாய் ஜீவன் சருகாய் சாயுதே
காலம் கோலம் போடுதே
கண் நீரும் கடலை மூடுதே

சிறு ஓடைத் தென்றல் மீது
சுனாமி மோதுவதோ


No comments: