201111 ஈர மண்ணில் ரூகை ஊதி (இறுதி)

ஈர மண்ணில் ரூகை ஊதி வாழ்வைத் தந்தானே
வாழ்வதற்கு வானம் பூமி அமைத்து வைத்தானே
மனப் பாதங்களின் நேர்வழிக்கு மார்க்கம் தந்தான்
அந்த மார்க்கத்தை ஏற்பதற்கு நபியை ஈந்தான்

ஓரெழுத்தும் கற்றிடாத உம்மத்து நபியை
ஹீராவில் கூராக்கள் ஓதச் சொன்னான்
குர்-ஆன் வேதமெல்லாம் ஒப்பிக்கும் ஊக்கம் தந்தான்
அந்த வேதமே மனிதனுக்கு பாதையாக்கினான்

தனக்கான தேவை இல்லாதவன்
நம் தேவை தீர்க்கும் வல்லோனவன்
அவன் தீனோரின் வரமாகத் தொழுகை தந்தான்
நம் நன்றி அதுதான்

பெண்ணின்றால் போகப் பொருள் என்ற பூமியில்
பெண்ணுரிமைக் கொண்டு வாழ நீதி விதித்தான்
அன்று அவதியிலே அடிமைகள் மூழ்கிய பொழுது
எங்கும் அடிமைகளே இல்லையென்று விலங்கை நீக்கினான்

மக்காவில் தீனோர் கண்ணீரில் உருக
குறைசியின் கொடுமை அந்த மண்ணில் பெருக
மதினா நகர் நோக்கி ஹிஜ்ராவின் கட்டளை இட்டான்
எளிய தீனோரை தன் பார்வையில் கொண்டு சேர்த்தான்

நாம் மறைந்தாலும் உயிரூட்டும் மறையோனவன்
நம் நீதி நாளின் அதிபதியே
அவன் ஓர் நாளும் ஓர் பொழுதும் ஓய்பவன் இல்லை
நம் பிறப்பும் அவன் கருணை

(சில மாற்றங்களை இசையமைப்பாளர் செய்திருக்கிறார்)

No comments: