ஹார்வர்டில் மட்டுமல்ல உலகின் அத்தனைப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்
தமிழ் இருக்கையின் பலன் என்ன என்று தமிழர்களாகிய நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் இருக்கை பலன் தந்துவிடப் போகிறது அதைத் தடுத்துவிட வேண்டும் என்று யாரெல்லாம் சிந்தித்துச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்
*
எங்கள்
உணர்வில்
உயிரில்
கலந்திருப்பது
தமிழ்
அதை
உங்கள்
சின்னஞ்சிறு
கைக்குட்டையால்
துடைத்தெறிந்துவிட
முடியாது
வீழ்வது
எதுவாக இருப்பினும்
வாழ்வது
தமிழாகவே இருக்கும்
தமிழர்தம்
நெஞ்சாங்குழிப்
பேழைகளில்
கவிஞர் புகாரி

No comments: