உரையழகுக் கவிதை
பெரும்பாலும் நாம் இசைகூட்டி எழுதப்படாத கவிதைகளையே புதுக்கவிதை என்கிறோம்.
ஆனால் அது பிழையான கருத்து.
புதுமையான கருத்துக்களைக் கொண்ட கவிதையே புதுக்கவிதை.
உரைநடையாய் இருக்கும் கவிதைகளை என்ன பெயர் சொல்லி அழைப்பது, அதை எப்படி யாப்பிலணக் கவிதைகளிலிருந்து பிரித்துக் கூறுவது என்ற கேள்வி தானே எழும்.
உரையழகு என்ற சொல்லை நான் அதற்குப் பயன்படுத்துகிறேன். ஒரு கேள்விக்கு மறுமொழியாய் நான் முகநூலில் எழுதும்போது தானே வந்து விழுந்தது இச்சொல்.
உரைநடையாய் இருந்தால் அது கதை கட்டுரை நாவல். உரையழகாய் இருந்தால் மட்டுமே அது கவிதை.
கவிதைக்குச் சொல்லழகும் வேண்டும் கருத்தழகும் வேண்டும். மொழி நடைகளுள் உயர்வான நடையாக இருந்தால் மட்டுமே அது கவிதையாக முடியும்.
அப்படியான உரைநடை அல்லது உரைவீச்சுக் கவிதைகளை உரையழகுக் கவிதை என்று அழைப்பதே பொருத்தமானது.
அன்புடன் புகாரி

No comments: