இடுகாட்டில் பெண்

இடுகாட்டுக்கு பெண் வர அனுமதி மறுக்கப்படுகிறது. ஏன்?

இதற்கான காரணத்தைத் தேடிப்பார்க்கிறேன். இதுதான் காரணம் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் எனக்குத் தோன்றுபவை கீழே:

1. பெண்கள் ஒப்பாரி வைப்பவர்கள். அதை வீட்டோடு நிறுத்திக்கொள்ளலாம் ஈமக்கிரியை அமைதியாக நடக்கட்டும் என்று இருக்கலாம்

2. பெண்கள் மென்மையானவர்கள், ஊரின் எல்லையில் பேய் பயங்கள் உள்ள நாட்களில் பெண் இடுகாடு வந்து பிணம் எரிவதைப் பார்த்தால் அவள் பயந்து மனோவியாதிக்குப் போவிடுவாள் என்று இருக்கலாம். திடுக் திடுக் என்று அவளுக்கு வாழ்நாள் முழுவதும் தூக்கிப்போட்டால் பாவமல்லவா?

3. எரியும்போது பிணம் எழும். அதை வெட்டியான் அடித்து நொறுக்குவான். இப்படி அடிக்கிறானே என் பாசத்துக்குரிய உறவை என்று அவள் வெட்டியானை வெட்டிப்போடவும் துணியலாம்.

4. பிணம் என்பது கிருமிகள் விரைவில் ஏற்கக்கூடியது. வயதானவர் செத்திருக்கலாம். நோய்வாய் பட்டவர்கள் செத்திருக்கலாம். யாராய் இருந்தாலும் நோய் பரவும். அது குழந்தைகளை சட்டென தொற்றும். குழந்தைகளோடு நெருக்கம் உள்ளவர்கள் பெண்கள். கர்ப்பிணி இருப்பாள், கைக்குழ்தைக்காரி இருப்பாள். நீ வா நீ வராதே என்று சொல்ல முடியாமை இருக்கலாம்.

5. ஆண்கள் இடுகாடு சென்று வரும்போது குளித்துவிட்டு வருவார்கள். பெண்களால் அவ்வளவு எளிதில் வெளியில் குளிக்க முடியாமையாக இருக்கலாம்.

இப்படியாய் பெண்களின் பாதுகாப்பே காரணமாய் இருக்கும் என்று நான் யோசிக்கிறேன்.

3 comments:

நட்புடன் ஜமால் said...

...கலாம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

இக்காலத்தில் எப்பிரச்சனையாயினும் சமாளிக்கக்கூடியவையே :))

ஜெகதீசன் said...

6. ஆணாதிக்கம்