ஆணும் பெண்ணும்

பெண் எப்படிப் படைக்கப்பட்டாளோ அப்படியே அவள் இருக்கிறாள்
ஆண் எப்படிப் படைக்கப்பட்டானோ அப்ப்டியே அவன் இருக்கிறான்.

80 வயதுவரைகூட காமம் தளராளம் இருப்பது ஆணின் படைப்பு
40க்குள்ளேயே காமம் ஒடுங்கிப்போய்விடுவது பெண்ணின் படைப்பு

ஒரு வருடத்தில் ஒரு பிள்ளை பெறுவது பெண்ணின் படைப்பு
ஒரே வருடத்தில் 365க்கு மேலும் பெற்றுக்கொள்ள முடிவது ஆணின் படைப்பு.

அவளிடம் கருவறை இவனிடம் சாவி அதுதான் இனப்பெருக்கத்தின் வழி.
அதுதான் இயற்கை. அதனால்தான் இந்தப் பிரபஞ்சம்.

ஆணிடம் பெண்தேடல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை
அப்படிப் பெண்தேடல் இல்லாத ஓரினச்சேர்க்கையாளர்களால் பிரபஞ்சமே அழிந்து போகும்

ஆண் பெண்ணைத் தேடவேண்டும்
பெண் ஆணைத் தேடவேண்டும்

பிள்ளைகள் பிறந்தபின் பெண்ணின் நிலைப்பாடு
தேடுதலிலிருந்து சற்றே விலகிவிடும்
ஆனால் ஆணின் தேடல் தொடரும்.
இது அடிப்படை, இயற்கை, வாழ்வியல் தத்துவம்.
சட்டங்களால் அழிக்கமுடியாத சாசுவதம்!

நம் சமூகத்தில் ஏன் ஒரு பெண்ணை அடிமுட்டாளாகவே சித்தரிக்கிறார்கள்
என்று தெரியவில்லை.

ஆணின் மேதாவித்தனம் பெண்ணை இப்படி அடிமையாகவே பார்ர்கிறது.

தானே சுயசிந்தனை உள்ளவன் என்ற அகம்பாவம்.
பெண் பின்புத்திக்காரி என்று காலகாலமாய்ச் சொல்லும் அவலம்.

18 வயதை எட்டிய பெண் தன் எண்ணங்களில்
தன் தேவைகளில் தெளிவாகவே இருப்பாள்.
அந்த வயதில் அவளுக்குக் கிடைப்பதுதான் வாழ்க்கை.
அவள் வாழ்க்கையை வாழ நம் சமூகம் அனுமதிப்பதே இல்லை

அவளைச் சுதந்திரமாக விட்டால் போதும்.

சும்மா இரு உனக்கு ஒன்றும் தெரியாது என்று
தகப்பன் தாய் அண்ணன் தம்பி என்று எல்லோரும்
அவள் விருப்பதைச் சாகடித்து அடிமையாக்குவதே வழக்கமாகிவிட்டது.

அவளின் அந்தந்த வயது தேவைகளை அவளே முடிவுசெய்யட்டும்.
அவளை அவள் சுதந்திரத்தில் விட்டுவிடவேண்டும்.

அதுதான் உண்மையான சம உரிமையின் முதல்படி!

No comments: