கல்லும் கடவுளும்

கேள்வி:

பிரபஞ்சம்தான் கடவுள். பிரபஞ்சத்திலிருந்து கல்லைப் பிரிக்காதீர்கள். கண்முன் பிரபஞ்சம் விரிந்து கிடக்கும்போது பார்வையைச் சுருக்காதீர்கள் என்று கல்லைக் கடவுளாக நினைக்கும் நண்பரிடன் கூறினேன். அதற்கு அவர் ”இல்லையே....பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் டெலெஸ்கோப்பின் மூலம் காண்பதுபோல் நான் கல்லின் மூலம் காண்கிறேன்.எங்கும் விழும் சூரிய ஒளியை ஒரே இடத்தில் கான்சன்ட்ரேட் செய்ய குவி ஆடி தேவைப்படுகிறதல்லவா?அந்த மாதிரிதான்.” என்றார்

பதில்:

இதிலுள்ள சிக்கல்களைக் கூறுகிறேன் கேளுங்கள்:

1. விஞ்ஞானிகள் டெலஸ்கோப்பின் மூலம் பார்ப்பது பிரபஞ்சத்தை அல்ல. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியைத்தான். பிரபஞ்சத்தை முழுதாக எவராலும் பார்க்க இயலாது.

2. பிரபஞ்சத்தை நாம் பிரபஞ்சத்துக்குள் இருந்துகொண்டுதான் பார்க்க முடியும். ஏனெனில் பிரபஞ்சத்துக்கு வெளி என்று அதாவது ஓடு என்று அதாவது எல்லை என்று எதுவும் கிடையாது. எனவே நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு விச்யத்தைக் கற்பனை செய்ய முயன்று முயன்று அதிசகிக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டவன் அத்தனை பெரியவனா என்று ஆச்சரியம் நிரந்தரமாய் நிற்கும்.

3. கல்லைக் காண்கிறேன் என்று நீங்கள் கல்லைக்காணவில்லை. கல் வீதிகளில் நிரம்பிக் கிடக்கிறது. நீங்கள் அவற்றைக் காண்பதில்லை. அவற்றை வணங்குவதில்லை.

4. கல் என்ற பெயரில் நீங்கள் காண்பது ஒரு உருவத்தை. அதுவும் மனித உருவத்தை. மனதில் மனிதனே தெய்வமென்று பதிவாகும். மனிதர்களுள் சக்திவாய்ந்த எவராலும் வெல்லமுடியாத ஒரு ஹீரோவைக் கடவுள் என்று தவறாக எடுத்துக்கொள்வீர்கள்.

5. இறைவனை இப்படியாக சுருக்கி அவமானப்படுத்தக் கூடாது. அவன் மிகப்பெரியவன். நிகரற்றவன். எல்லைகள் இல்லாதவன். முதலும் முடிவும் இல்லாதவன்.

6. வாழ்ந்து செத்துப்போன மனிதர்களைக் கடவுள்கள் என்று சொல்வது மிக மிகப் பழைமையானது. செத்தொரெல்லாம் தெய்வங்கள் என்று நம்பித் திரிந்தது அறிவு வளர்ச்சியடையாத கற்காலத்துக்கும் முற்காலத்தில்.

6. இறைவனை நாம் இறைவனாகவே பார்ப்போம். அப்படிப் பார்த்தால்தான். நாம் கோவில் கட்டமாட்டோம். அங்கே சென்றுதான் கும்பிட வேண்டும் என்று எண்ண மாட்டோம். கோவில் வாசலில் உண்டியல் வைக்க மாட்டோம். பத்து காசு போட்டு பத்துகோடி லாட்டரி விழவேண்டும் என்று மூடநம்பிக்கை கொள்ளமாட்டோம்.

7. கல்லில் பலப்பல மனித உருவங்களை ஆணாகவும் பெண்ணாகவும் செய்து அங்கங்கே வைத்து வழிபட்டால், கடவுள் ஒருவன் என்ற உண்மை உள்ளங்களைச் சென்றடையாது. உயிரில் கலக்காது. கடவுள் தவறாகவே அறியப்படுவார். கடவுள் இல்லை என்று நிரூபிக்க இது ஒன்றே போதுமானதாகிவிடும்.

8. கடவுள் மறுபபாளர்கள் உண்மையில் கடவுளை மறுக்கவில்லை. கடவுள் என்ற பெயரில் உள்ள மூட நம்பிக்கைகளைத்தான் மறுக்கிறார்கள்.

9. எல்லா மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், புல் பூண்டு தாவரங்களுக்கும், கல் மண் என்ற அனைத்துக்கும் ஒன்றே ஒன்று இருந்தால்தான் அது கடவுள். இல்லாவிட்டால் அது வகை வகையான கடைச்சரக்குகளாகிவிடும். ஆளாலுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எது உசத்தி என்று சண்டை பிடிப்பார்கள்.

10. நாமிருக்கும் பிரபஞ்சம் எதனுள் இருக்கிறதோ என்று யாருக்குத் தெரியும். எதனுள் என்ற அது இன்னும் வேறு எதனுள் இருக்கிறதோ யாருக்குத் தெரியும். இப்படியாய் அது எத்தனை லட்சம் அடுக்குகளோ யாருக்குத் தெரியும். இப்படியாய் கற்பனை உயர உயர கடவுளின் தோற்றம் எத்தனை பிரமிப்பைத் தரும். அதன் முன் நாம் எத்தனை சிறு தூசு என்று தெரியும். அதைவிட உயர்வாய்க் கடவுளைப்பற்றி ***அறிவுப்பூர்வமாய்*** எண்ண முடியுமா?

No comments: