29

உன்னோடிருந்த
நொடித் துகள்கள் ஒவ்வொன்றும்
இன்னமும் எனக்குள்
தூண்டி விட்டுக்கொண்டே
இருக்கின்றன

முடிச்சிட்டுக் கட்டி
ஞாபகங்களால்
நீந்தித் தொடமுடியாத
மாய மரண மௌனத் தீவில்
இட்டு வைத்திருக்கும்
என் சுயத்தை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

சாந்தி said...

வார்த்தை ஜாலங்களில் மனதின் ஆழம்.


--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..

பூங்குழலி said...

முடிச்சிட்டுக் கட்டி
ஞாபகங்களால் நீந்தித் தொடமுடியாத


அருமை