கவிதையும் நாவலும்

சில சொற்களே கொண்ட 
ஒரு சிக்கனக் கவிதை
நீண்ட நாவல் எழுதும்
நேரத்தைக் கூட 
எடுத்துக்கொள்ளக் 
கூடும்

நாவல் படைப்பில்

அதிக நேரம் 
எழுதிக்கொண்டே இருப்பார்கள்

கவிதையிலோ 

அதிக நேரம் 
மௌனமாகவே இருப்பார்கள்

சட சடவென்று 

ஒரே நிமிடத்தில்
கவிதை கொட்டிவிடலாம்

ஆனால் 

அந்தக் கவிதை 
உள்ளுக்குள் 
கவிஞனே அறியாது
ஒரு சமுத்திரத்தின் வளர்ச்சியைப் 
பெற்றிருக்கும்

பல நாவல்களை 
வென்றெடுக்கும் வல்லமையை
ஒரு சிறு கவிதை  கொண்டிருக்கும்