முன்னுரை

இந்த வாரம்
மூன்று கவிதைகள் என்னிடம்
வந்து முட்டின

 நேரமில்லாப் பணிச்சுமையில்
பிறகு எழுதலாம் என்று
என் உணர்வுகளின் தாக்கத்தை
ஒத்திப் போட்டு
அவற்றை
வார்த்தைகளாக்காமலேயே
விட்டுவிட்டேன்

இது
கருக்கலைப்புக்குச்
சமம் என்பதை
நான் உணர்ந்திருந்தாலும்
அதுதான்
காலத்தின் கட்டாயம் என்பதை
புரிந்து

மௌனமாய்
அந்த
ஊர்வலத்தில்
நானும்
நகர்ந்துகொண்டே
இருக்கிறேன்

No comments: