Kill the unbelievers wherever you find them

இசுலாம் தொடர்பான தங்கள் பதிவுகளை ஏற்கனவே பார்த்துள்ளேன்,

( “Kill the unbelievers wherever you find them.” Koran 2:191

“Make war on the infidels(non believers of Islam) living in your neighborhood.” Koran 9:123
...
“When opportunity arises, kill the infidels(non believers of Islam) wherever you catch them.” Koran 9:5

“Any religion other than Islam is not acceptable.” Koran 3:85)

-இலங்கை நேசன் இலங்கை

இப்படி ஒரு கருத்தை சென்னையே சிறந்த நகரம் என்று நான் இட்ட ஏற்றுமடலுக்குக் கருத்திடல் பகுதியில் திரு இலங்கை நேசன் எழுதி இருக்கிறார்.

இதற்கான மறுமொழியை நான் இங்கே எழுத இருக்கிறேன். உண்மையறியாது அவர் ’இடையில் வாசித்து’ குழம்பியிருக்கும் ஒன்றைத் தெளிவு படுத்த வருகிறேன்.

பணிச்சுமை காரணமாக நான் சொட்டுச் சொட்டாய் கொட்டும் அருவையாகவே இருக்க முடியும். அதை மட்டும் அனைவரும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் அத்தனையையும் கொட்டி முடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இஸ்லாம் இஸ்லாமியர்களாலேயே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மார்க்கம். மாற்று மதச் சகோதரர்கள் பிழையாகப் புரிந்துகொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

”சகோதரனின் அடிபட்ட காலில் சீழ்பிடித்து வேர் அழுகி அதன் காரணமாக உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் அவன் உயிரைக் காக்கும் பொருட்டு சித்த மருத்துவக் குறிப்பிற்கிணங்க, பண்டைத் தமிழன் தன் சகோதரனின் காலை வெட்டி எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்”

இது ஒரு வரலாற்றுக்குக் குறிப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். இதிலிருந்து....

”பண்டைத் தமிழன் தன் சகோதரனின் காலை வெட்டி எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்”

இந்த வரிகளை மட்டும் எடுத்து போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டுங்கள். என்ன நடக்கும்?

http://www.tamililquran.com/qurandisp.php?start=2#2:191 இங்கே செல்லுங்கள்

குர்-ஆன் வசனங்கள்:

2:190
2:191
2:192

ஆகியவற்றை வாசியுங்கள்.

பிறகு நாம் நிறைய பேசுவோம் சகோதரரே!


*

முதலில் குர்-ஆனை எப்படி அணுகவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

குர்-ஆன் ஒரு மொத்த நூலாக அப்படியே வந்து இறங்கிவிடவில்லை.

நீதிமன்ற வழக்குகளைப் போலவும் அதற்கான தீர்ப்புகளைப் போலவும் தான் பெரும்பாலும் குர்-ஆன் வழங்கப்பட்டுள்ளது.

அன்றைய அராபியர்களின் வரலாற்றினைத் தெரிந்துகொண்டு, அதனோடு தொடர்பு படுத்தி வாசிக்கும்போது குர்-ஆன் மிக மிக எளிமையானதாய் இருக்கும்.

குர்-ஆனைப் புரிந்துகொள்ள ஹதீதுகளின் துணை தேவையே இல்லை. ஆனால் அன்றைய வரலாற்றை அறிந்திருந்தால் அது நிறையவே கைகொடுக்கும்.

அண்ணல் முகம்மது நபியின் வரலாறு, அவரின் பிறப்பு முதல் இறப்புவரை சரியாகச் சொல்லும் வரலாறு மிகவும் முக்கியம்.

The Messenger என்ற ஓர் திரைப்படம் அப்படியான வரலாற்றின் தேவையான பகுதிகளைத் தெளிவாகக் காட்டக்கூடியதாய் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=17C6HOp8NIA

இந்தப்படத்தை அழகாகத் தமிழுக்கு மொழிமாற்றி இருக்கிறார்கள். அப்படத்தை நான் உங்கள்திரையில் YouTube கண்டேன் ஆனால் தற்போது அது உரிமம் காரணமாக நீக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தை ஒரு முன்னுரையாக மட்டும் எடுத்துக்கொண்டு, அண்ணல் முகம்மது நபியின் வரலாற்றையு அன்றையநாள் அராபியாவையும் பல நூல்கள் வழியாக வாசிக்கலாம். இணையத்திலும் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.

*

இலங்கைநேசன் இலங்கை பைபிளுக்கு விவிலியம் என்பதுபோல் குர்ஆனுக்கும் ஏதாவது பெயர் உண்டா

அன்புடன் புகாரி உண்மையைச் சொல்லப்போனால், குர்-ஆனுக்குப் பெயரே இல்லை. வானவர் மூலம் அண்ணல் முகம்மது நபிக்கு இறைவனிடமிருந்து வந்த செய்திகள் தான் குர்-ஆன் என்று சொல்லப்பட்டது. குர்-ஆன் என்றால் ‘ஓதப்பட்டது’ என்று பொருள். இறைவனின் திருமறையில் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட குர்-ஆன் என்ற சொல்லையே அந்தத் தொகுப்புக்குப் பெயராகச் சூட்டினர். மற்றபடி இது ஒரு நூல், இந்நூலின் பெயர் குர்-ஆன் என்று இறைவன் சொன்னதாக நான் எங்கும் கண்டதில்லை. உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் இலங்கைநேசன் இலங்கை. நிறைய கேளுங்கள், அப்போதுதான் நான் எதைச் சொல்லலாம் என்ற முடிவுக்கு வரமுடியும். உங்கள் கேள்விகள் மெமையாக இருக்க வேண்டும் என்றில்லை, குத்தீட்டியாகவும் இருக்கலாம். நன்றி

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இடையில் சில வரிகளை மட்டும் படித்து முடிவுக்கு வருதல் தவறுதான் நண்பரே