புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா? மனைவியா?

கணவன் மனைவியையும்
 மனைவி கணவனையும்
 மூச்சுக் காற்றினைப் போல
 தீர்ந்தே போகாமல்....
 தொடர்ந்து....
 இடையறாது
 மன்னித்துக்கொண்டே இருக்கும்போது
 அவர்கள்
 மீண்டும் புதிதாகப் பிறக்கிறார்கள்
 மீண்டும் புதிதாகக் காதலில் வீழ்கிறார்கள் 
 மீண்டும் புதிதாகக் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்
 ஆகையினால்
 மீண்டும் புத்தம் புதிதாக
 அந்த முதலிரவுச் சொர்க்கங்கள்
 தேன்நிலவில் நிறைந்து நிறைந்து
 உடலெங்கும் மனமெங்கும்
 உயிரெங்கும் வழிந்தோடுகின்றன.

1 comment:

KarpagamElangovan said...

அழகுதான்.. கவிதைக்கு பொய்.