அழகு தமிழில்
ஆண்டாளை எடுத்துரைத்த
வைரமுத்துவை
பச்சைச் சொல் கக்கி
கொடுவாள் நீட்டி
சுடுரத்தம் கேட்டு
பித்துத் தலைகொண்ட
ஜோம்பிகளாய்க்
கொன்று தின்றீர்கள்

வருத்தம் தெரிவித்தபின்னும்
வறுத்தெடுத்தீர்கள்

ஆனால்
தமிழ்த்தாய் வாழ்த்தையே
அவமதித்த மடாதிபதி
விஜயேந்திரரை
என்ன செய்தீர்கள்?

தமிழ்த்தாய்வாழ்த்தை அவமதிப்பது
தமிழை அவமதிப்பதல்லவா
தமிழை அவமதிப்பது
தமிழ்க் கவிதாயினி
ஆண்டாளை அவமதிப்பதல்லவா?

ஆண்டாளின் பக்தர்களென்று
காட்சிதந்தவர்கள்
உண்மையில்
ஆண்டாள் பக்தர்கள்தாம்
என்றால்
உங்களின் நஞ்சுச் சொற்கள்
எங்கே
நரபலி வெட்டரிவாள்கள்தாம்
எங்கே எங்கே

உங்கள்
அரசியல் கூத்துக்கு
ஆட்சி பிடிக்கும் ஏய்ப்பிற்கு
ஏனடா ஆண்டாளை
பலியிட்டீர்கள்?

கவிஞர் புகாரி

No comments: