எங்கள்
உணர்வில் உயிரில்
கலந்திருப்பது
தமிழ்
அதை உங்கள்
சின்னஞ்சிறு
கைக்குட்டையால்
துடைத்தெறிந்துவிட முடியாது

வீழ்வது
எதுவாக இருப்பினும்
வாழ்வது
தமிழாகவே இருக்கும்
தமிழர்தம்
நெஞ்சாங்குழிப் பேழைகளில்

கவிஞர் புகாரி

No comments: