ஒரு மொழிக்குள் 
இன்னொரு மொழி 
நுழைந்து 
ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்போது 
அழிவது வெறும் சொற்கள் அல்ல, 
அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்ட 
மக்களின் அடையாளங்கள், 
கலாச்சார பண்பாடுகள், 
ஆணி வேர்கள் போன்ற 
ஓர் தொன்மை இனத்தின் 
ஆதார அடிப்படைப் பண்புகள் 
அத்தனையும் என்பதை 
என்று நாம் உணரப் போகிறோம்?

No comments: