படைப்புலகில், இலக்கியம்தான் முதலில் தோன்றியது.
அந்த இலக்கியத்திற்காகத்தான் பின் இலக்கணம் உருவாக்கப்பட்டது.

அதாவது,
இலக்கியம் இயல்பாய் வந்தது.
இலக்கணம் செய்யப்பட்டது.

ஆகவே இன்றும் இலக்கியங்கள் தானே இயல்பாய்த் தோன்றவேண்டும். இலக்கணத்திற்கு அவை கட்டுப்படத் தேவையில்லை.

இலக்கணத்தைப் பரிந்துரையாக எடுத்துக் கொண்டால் மொழியின் கட்டமைப்பை வலுப்பெறச் செய்யலாம்.

இலக்கியத்தைச் சுதந்திரமானதாக ஆக்கிக்கொண்டால் மொழியின் உயிர் துடிப்பதைப் புலன்களெல்லாம் உணரக்கூடியதாய் இருக்கும்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை நண்பரே
இலக்கியத்தை சுதந்திரமானதாக ஆக்குவோம்