கண்திறந்த போதிலும்
காட்சியற்றுப் போகலாம்
பொன்னிறைத்த வீட்டிலும்
புன்னகைக்க மறக்கலாம்

விண்ணொளிரும் மீன்களும்
விழுந்தெரிந்தே போகலாம்
அன்பிருக்கும் வாழ்வுதனில்
இன்பமின்றிப் போகுமா

தரமில்லாத நாவினால்
தகரும் உறவுப் பாலமே
அறமில்லாத அறிவினால்
அழியும் உலகம் யாவுமே

ஒருவர் உயிரில் ஒருவராய்
இருவர் வாழ வேண்டுமா
அறிவைத் தூர நிறுத்து - உயர்
அன்பை உயிரில் பொருத்து

அன்புடன் புகாரி

No comments: