மதத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
சாதியை மாற்றமுடியுமா?
கிருத்தவர்கள் இஸ்லாமியர்கள் போன்றே இந்துக்களும்.
ஆனால் இந்துக்களில் சாதி இருப்பதால் யாரும் இந்துமதத்துக்குள் நுழையவே முடியாது.
நுழைந்தால் எந்த யாதியும் எந்தப் புதியவரையும் ஏற்றுக்கொள்ளாது - குறிப்பாக மேல்சாதி.
இதுபற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.
ஆரியர்களின் வருகையின் பின்னரே தமிழர்களுக்கு இந்துமதம் வந்தது. இப்படியாய் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மதமும் வந்தது.
காலகட்டம்தான் வேறே தவிர எல்லோரும் மதம் மாறியவர்களே!
அதில் பிழையில்லை.
இன்றும் மாறலாம். என்றும் மாறலாம்.
ஏனெனில் மதம் என்பது ஒரு வாழ்க்கை நெறி.
ஜாதி என்பது வாழ்க்கை நெறியல்ல. பிரிவினை விதி. நீ மேலானவன் அவன் கீழானவன் என்று மனிதனை மனிதனே தாழ்த்தும் கேடுகெட்ட செயல்.
ஜாதியை ஒழிக்காமல் மனிதநேயம் மலரவே முடியாது.
ஏனெனில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்காமல் எப்படி மனித நேயம் வளர முடியும்.
முடிவெடுத்து முடித்துக்கொள்ளுங்கள் ஜாதியை!
அன்புடன் புகாரி

No comments: