ஆங்கிலமும் தமிழும் ஒன்றாகமுடியாது.

ஆங்கிலம் தொடக்கத்திலேயே பிறமொழிகளை இணைத்துக்கொண்டு இந்தியைப் போல உருவான ஒரு வேரற்ற மொழி.

தமிழ் அப்படியல்ல, தானே தோன்றி தானே வளர்ந்து எவரும் அழிக்காமுடியா வண்ணம் தளைத்து வளர்ந்து செழித்த செம்மொழி.

பிறமொழிச் சொற்களை ஏற்பதில் தமிழ் அன்பு மனம் கொண்டதாகவே இருக்கிறது.

ஆனால் அருமையான தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திலிருந்து நீக்கிவிட்டு பிறமொழிச் சொற்களையே பயன்படுத்த நேரும்போது, பிறமொழிச் சொற்களைக் களைந்துவிட்டு தூய தமிழ்ச் சொற்களை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வதே உண்மையான தமிழ்ப்பற்று.

நாம் ஏதேனும் தமிழுக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வோம்?

இளையவர்களைத் தமிழ்ப் பேசச் செய்வோம்

இனிய தமிழ்ச் சொற்களைப் புழக்கத்தில் வைப்போம்

செழுமையான இலக்கியங்களைப் பாராட்டி மகிழ்வோம்

உலகத் தரம் வாய்ந்த ஆக்கங்களைத் தமிழுக்குள் கொண்டுவருவோம்

அன்புடன் புகாரி

No comments: