கருணைதான்
மனித குலத்தின்
ஒற்றைத் தேவை

கருணைதான்
மனிதர்களின்
ஒற்றை அடையாளம்

கருணைதான்
உயிர் காக்கும்
ஒற்றைக் கவசம்

கருணைதான்
ஐம்புலன்களின்
ஒற்றை மகுடம்

கருணைதான்
உறவின் நட்பின்
ஒற்றை அடிப்படை

கருணைதான்
வாழ்க்கைக்கான
ஒற்றை ஆதாரம்

சாதுர்யமாகச் செயல்படுவதுதான்
சாதனை என்று நினைக்கிறார்கள்
இல்லை
கருணையோடு செயல்படுவதுதான்
மானுடம் காக்கும் அறிவுடைமை

கருணைதான்
இறைவன்

கருணைதான்
இதயத்தில்
இறைவன் வசிப்பதற்கான
அத்தாட்சி

அன்புடன் புகாரி

No comments: