இனிய நற்பூக்கள்

இந்துக்கள்
என் உடன் பிறப்புகள்
இறுக அணைத்துக்கொள்கிறேன்

கிருத்துவர்கள்
என் அண்ணன் தம்பிகள்
கட்டித் தழுவுகின்றேன்

முஸ்லிம்கள்
என் சகோதரர்கள்
மார்போடு மார்பாக்கிக் கொள்கிறேன்

அத்தனை ஆத்திகரும்
என் அண்ணன் தம்பிகள்
அன்புக்குள் அன்பானவர்கள்

இன்னும் நாத்திகரும்
என் உடன் பிறப்புகள்
நெஞ்சத்தின் இனிய நற்பூக்கள்

சகோதரம் கொண்டாடாதவன்
ஆத்திகனும் இல்லை
அசலான நாத்திகனும் இல்லை

அவனுக்கு
இறைவன் மீதான பக்தியும் இல்லை
இயற்கையின் மீதான காதலும் இல்லை

அன்புடன் புகாரி

No comments: