தமிழ் மொழியை அழித்துவிட்டுத் தன்னையே நிலை நிறுத்திக்கொள்ள வடமொழி பல நூற்றாண்டுகளாய்ப் போராடியது.

தன் சக்தியையெல்லாம் திரட்டித் தமிழைச் சூரையாடியது.

மதத்தில் ஏறிக்கொண்டு தமிழின் முதுகெலும்பை முறிக்கப் பார்த்தது.


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரைக்கும் தமிழ் இணைத்துப் பார்ப்பதுதான், அழிக்கப் பார்ப்பதில்லை.

எம்மொழியையும் அழிக்க எங்கள் தமிழ் மொழி முயன்றிருக்கிறதா?

எம்மொழியின் முதுகிலும் ஏறிச் சவாரி செய்திருக்கிறதா?

எத்தனையோ மொழிகளுக்குத் தாய் எங்கள் தமிழ் மொழி.

அழிக்க நினைத்த மொழிகள் அழிந்துபோக, ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து இனிதாய்க் காலூன்றி இன்னமும் கம்பீரமாய் நிற்கிறது எங்கள் தங்கத் தாய்த் தமிழ் மொழி

அன்புடன் புகாரி

No comments: