நெடுபுலம் பெயர்ந்தவனிடம்...

இந்நொடி சூடாய் இருந்த
ரத்தத்திலிருந்தும்
சதையிலிருந்தும்
என்னதான் பிரிந்தது

பிரிந்தது
பிரிந்தேதான் போனதா
அல்லது
என்னைக் காணவும்
கண்டங்கள் தாண்டி
என்னருகே வந்து

காற்றென நிற்கிறதா
 

எப்படி அறிவேன்
நான்
யாரிடம் கேட்பேன்

No comments: