இரத்தவழி என்றில்லை

ஆதரவைத்
தேடித் தவிக்கும் கோடுகளும்

அன்பைத்
தேடித் தவிக்கும் கோடுகளும்

சந்திக்கும்
தற்செயல் புள்ளிகள்தாம்

உறவெனும்
அற்புத ஆரத்திற்கான
அத்திவார முத்துக்கள்

ஓர் உறவு
உயிர் போகும்வரைக்கும்
நிலைத்திருக்க வேண்டுமென்று
அவசியமில்லை

ஆனால்
இருக்கும்வரை
இறக்கும்வரைக்கான
சுக நினைவுகளைத் தருவதாய்
இருக்க வேண்டும்




No comments: