இது நான் ஏறிய முதல் மேடை. இது எனக்கு முதல் புகைப்படமும் கூட

முதல் மேடையே கவிதை மேடைதான். இதில் நான் வாசிக்கும் கவிதை என்னிடம் இல்லை. தொலைந்துபோய்விட்டது.

யாரோ ஒரு புகைப்படக்காரர் என்னைப் புகைப்படம் எடுத்து உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டார். மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

என் சிறுவயது புகைப்படங்களைக் காணவேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. ஆனால் எவருமே எடுத்து வைக்கவில்லை. இந்த மூஞ்சிக்கெல்லாம் புகைப்படம் கிடையாது என்று விட்டுவிட்டார்கள்

No comments: