13

நீ
குழைந்த
வார்த்தைகளை
நான்
எப்படிக் கொண்டாடுவேன்
என்றே தெரியவில்லை

உதிர்த்த
நீ
மறந்துபோவாயோ
தெரியாது

ஏற்ற நானோ
தொலைந்தே போனேன்

தொலைந்தேன் என்றதும்
சுயம் தொலைத்தேனோ
என்று மருளாதே

நான் நானாக மீண்டேன்
வரமாக

ஈரமற்ற
வெளிகளிலிருந்து
மழை அவிழும் சோலைக்குள்
இந்தக் கவிவண்டை மீட்டுத்தந்த
உன் வார்த்தைப் பூக்களைப்
பாராட்டுகிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: