கடவுள்
இல்லை என்று சொல்வதும்
மதங்கள்
இல்லை என்று சொல்வதும்
சாதிகள்
இல்லை என்று சொல்வதும்
அவற்றை
இல்லை என்று
சொல்வதற்காக அல்ல

மூடநம்பிக்கைகள் கூடாது
என்று சொல்வதற்காக
காட்டுமிராண்டித்தனம் கூடாது
என்று சொல்வதற்காக
வன்முறை கூடாது
என்று சொல்வதற்காக
தீண்டாமை கூடாது
என்று சொல்வதற்காக

வேரையே அறுக்கச் சொல்வது
விளைவதெல்லாம்
விசமாக இருப்பதால் மட்டும்தான்


1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மூட நம்பிக்கைப் பெரும் விஷம்தான்