கஜா புயல்

காவிரி நீரை நிறுத்திவிடுவோம், மீத்தேன் ஹைரோ கார்பன் எடுப்போம், ஸ்டெர்லைட் பாக்டரிகள் வளர்ப்போம், நெல்லை விட்டு தென்னைக்குப் போங்கள் என்று பரிந்துரைப்போம், பின் புயல் நிவாரணமும் சரியாக வழங்கமாட்டோம்.
ஒழியட்டும் விவசாயிகள்.
கார்ப்பரேட்டுகள் வெகு ஜோராக ஆளும்போது விவசாயிகள் படு மோசமாகச் சாகத்தானே வேண்டும்.
பசுமை செத்து காங்கிரீட்டுகள் முளைக்கத்தானே வேண்டும்?
இன்று சிக்கன் என்பது உண்மையான சிக்கனா?
இன்று கத்திரிக்காய் என்பது உண்மையான கத்திரிக்காயா?
இன்று நம் வாழ்க்கை என்பது நூறு வருடம்முன் வாழ்ந்தவர்களின் இயற்கையான வாழ்வா?
கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு நான் பலமாடிக்கட்டிடத்தில் கரண்சி நோட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தால் என்னை எந்தப் புயலும் பாதிக்காது என்ற நினைப்பு சாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை
கவிஞர் புகாரி

No comments: