இணக்கம் கேட்டேன்
ஈட்டி எறிகிறார்கள்

அறம் சொன்னேன்
அடிக்க வருகிறார்கள்

அன்பு போற்றுகிறேன்
அசராமல் தூற்றுகிறார்கள்

உன்வழி உனக்கு என்றேன்
எங்கள் வழி
கொடுஞ்சொல் என்கிறார்கள்

என்வழி எனக்கு என்றேன்
உனக்கு வலி தருவோம்
என்கிறார்கள்

கவிஞர் புகாரி

No comments: