சாவே இல்லாதது
சாவு மட்டுமே

சாவில் 
சாவிருந்தால்தான்
அது நல்லது

நீரில்
நீரில்லாவிட்டால்
என்னாகும்?

சாவில்லாச் சாவோ
ஆகப்பெரும் 
கொடுமையானது

என்னில்
நானில்லாமல் போவேன்
அது நன்று

சாவில்
சாவில்லாமல் போயின்
அதுவே
சாவிலும் சாகாச் சாவு

’சா’வில் ‘சா’ விருக்கிறது
மொழி இலக்கணத்
தமிழெழுத்தில்

சாவுக்குத்தான் சாவே இல்லை
மனித வாழ்க்கைத்
தலையெழுத்தில்

கவிஞர் புகாரி

No comments: