என்னிடம் நான் கேட்கும் என் கேள்விகள்

தன்னைப்பற்றி ஒரு நாளேனும் சிந்திக்காமல் ஒருவர் இருப்பது அரிது. இன்று சிந்திக்காவிட்டால் நாளை நிச்சயமாக சிந்திப்பார் என்றே நான் நம்புகின்றேன்.

தன்னைப்பற்றிய சிந்தனை என்ற உடனேயே, தன்னை நோக்கிய கேள்விகளாய் அவை படை எடுக்கின்றன. அந்தக் கேள்விகளே நான் என்று ஆகிவிடுகின்றன.

கேள்வியும் நானே பதிலும் நானே என்பது தன்னைப் பற்றி அறியும் நிலைப்பாடுகளுள் மிக முக்கியமான ஒன்று.

தன்னைப்பற்றி தானே அறிய முயலும்போது அங்கே பொய் என்ற பேச்சுக்கே இடமில்லை. எவருக்காகவும் எதையும் மாற்றிச் சொல்ல வேண்டுமே என்ற சங்கடம் இல்லை. உண்மைத் தளத்தில் தான் என்ற உயிரின் நடை உயர்வாய்ச் செல்கிறது. அதுவே அந்தரங்கம் என்றும் ஆகிறது.

அப்படி தன்னை அறியும் பொருட்டு தன்னிடம் கேட்கும் தன் கேள்விகளை எண்ணி வியக்கும் வியப்புகளே இக்கவிதை.


என் கேள்விகள்…

என் இருத்தலின்
அகராதிகள்

எனக்கான
என் பயணங்கள்

என் மூச்சுக் காற்றுக்குச்
சூடு தரும் சக்திகள்

என்னை எனக்கே
அடையாளம் காட்டும்
கைகாட்டிகள்

என் வலிமையோடு
என் வலிமையைப்
போரிட வைக்கும்
தளபதிகள்

முகத்திரைகளற்ற
என் முகங்கள்

என் சொற்களில்
சுகப்படாத
என் தேடல்கள்

தனிமைக் குகைக்குள்
என்னைத்
தாகத்தோடு அடைத்து
மீண்டுவர பல
ஆண்டுகள் ஆக்கிவிடும்
பூதங்கள்

எனைச் சாகடிக்கும்
மரண நெருக்கடிகள்
சாகாமல் வாழவைக்கும்
உயிர்த் துளிகள்

என் வாழ்வுப் பாதையில்
என்னை எனக்குமுன்
நானே நிறுத்தி விசாரித்த
என் விசாரிப்புகளுக்கு
வெகுமதிகளாய்க்
கவிதைகளைத் தந்த
படைப்பாளிகள்

கேள்விகள்தாம் கேள்விகள்தாம்
எல்லாம் எல்லாம்
என்னை நோக்கிய
என் கேள்விகள்தாம்

#அறிதலில்லாஅறிதல்
#கவிஞர்புகாரி
#கவிதை




***45

கேள்விகள்

என் இருத்தலின்
அகராதிகள்

எனக்கான
என் பயணங்கள்

என் மூச்சுக் காற்றுக்குச்
சூடு தரும் சக்திகள்

என்னை எனக்கே
அடையாளம் காட்டும்
கைகாட்டிகள்

என் வலிமையோடு
என் வலிமையைப்
போரிட வைக்கும்
தளபதிகள்

முகத்திரைகளற்ற
என் முகங்கள்

என் சொற்களில்
சுகப்படாத
என் தேடல்கள்

தனிமைக் குகைக்குள்
என்னைத்
தாகத்தோடு அடைத்து
மீண்டுவர பல
ஆண்டுகள் ஆக்கிவிடும்
பூதங்கள்

எனைச் சாகடிக்கும்
மரண நெருக்கடிகள்
சாகாமல் வாழவைக்கும்
உயிர்த் துளிகள்

என் வாழ்வுப் பாதையில்
என்னை எனக்குமுன்
நானே நிறுத்தி விசாரித்த
என் விசாரிப்புகளுக்கு
வெகுமதிகளாய்க்
கவிதைகளைத் தந்த
படைப்பாளிகள்

கேள்விகள்தாம் கேள்விகள்தாம்
எல்லாம் எல்லாம்
என் கேள்விகள்தாம்

அன்புடன் புகாரி

No comments: