கொடுத்துவிடு கொடுத்துவிடு

இதழ்களில் எழும்
தாறுமாறு சங்கீதம்
காதுகளை மூர்ச்சையாக்க

நரம்புகளில் கிளம்பும்
நாசகாரப் புயல்கள்
விழிகளைக் குறிவைத்து
வெறியோடு வீச

மூளைக்குள் நிலவும்
மூர்க்க அதிர்வுகள்
இதயக் குருவியை
மின்ராட்டினமேற்றி
சுற்றோ சுற்றென்று சுற்ற

இன்னும் எத்தனை நொடிகளடீ
நீடிக்கும் இவ்வுயிர் ?

கொடுத்துவிடு கொடுத்துவிடு
என் முதல் முத்தத்தை

No comments: