காதல் எனப்படுவது

இதயங்களின்
புனிதமான பகுதியிலிருந்து
நெகிழ்வான பொழுதுகளில்
இயல்பாகக் கழன்றுவிழும்
மிக மெல்லிய
உயிர் இழைகளால்
சாட்சியங்களோ
சட்டதிட்டங்களோ
இல்லாமல்
சுவாரசியமாய்ப்
பின்னப்படும்
ஓர் உறுதியான
உணர்வுவலை

No comments: