அடைகாத்த முட்டைகளாலேயே...

அந்தரங்கமாய் விழும்
உன் விழிகளை அடைகாத்த
என் இதயப் புறா

உன் விழிகள் வெறும்
பொன் முடைகள்தாம்
என்றறிந்த கணத்தில்

அடைகாக்கும் சுகத்தினின்று
மீளவும் முடியாமல்
குஞ்சுவராது என்ற சோகத்தைத்
தாளவும் முடியாமல்

அடைகாத்த முட்டைகளாலேயே
அடைகாக்கப்பட்டு
ஆர்ப்பரிக்கும்
நினைவுக் குஞ்சுகளாய்
முடிவில்லாமல் பொறிந்துகொண்டே

No comments: