தண்டனை

அன்பே
நூறாவது முறையாகவும்
நீ என்னைத் தனிமையின்
தீச்சிறையில் அடைத்துவிட்டு
உன் வெற்றிக்காகக்
காத்திருக்கிறாய்

ஆனால்
உன்னைவிட
இன்றெனக்குத்
தனிமை
பிடித்துப் போய்விட்டது

No comments: