***ஏன்

நான் உன் விழி தீபத்தின்
விட்டில் பூச்சி

உன் சூரிய நெற்றியில்
விழும் பனித்துளி

உன் கன்னக்
கண்ணாடி மாளிகையில்
உணர்வு இழைகளால்
காதல் வலை பின்னிய சிலந்தி

என்னை எற்றுக் கொள்ளாதது
சத்தியமாய் உன் தவறில்லை

பின் ஏன் நானுந்தன்
அனல் முகத்தின் முன்
மெழுகாய்
இன்னமும் நிற்கின்றேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


No comments: