என்னை விதைத்தவள்

விண்ணை நிறைப்பது நீலம் - என்
விழியை நிறைப்பது கனவு
என்னை விதைத்தவள் நீயே - என்
இளமை துளிர்த்தது பூவே

இன்னும் என்னடீ மீதம் - என்
இதயம் போடுதே தாளம்
உன்னைத் தேடினேன் அன்பே - என்
உயிரில் குடியேறு இன்றே

No comments: