நமக்கு எவ்வளவு
நேசத்துக்குரியவர் என்றாலும்
ஊழல் வழக்கில் சிக்கி
நிரூபிக்கப்பட்டுவிட்டால்
படுபாவி என்று எரித்துக்
கொண்டாடத்தான் வேண்டும்


அம்மாவாய்
இருந்தால் என்ன
ஐயாவாய்
இருந்தால் என்ன

மக்கள் சொத்து
நாடு நலம்பெற
ஒப்படைக்கப்படும்போது

அந்த நம்பிக்கைக்கு
ஒரு பைசா
கலங்கம் விளைவித்தாலும்
அது
சுண்டெலியாய் இருந்தாலும்
பெருச்சாளியாய் இருந்தாலும்
பொறியில் அடைக்கத்தானே வேண்டும்

நாடு வேண்டுமா
நாசம் வேண்டுமா

இனியாவது
முடிவு செய்ய வேண்டாமா?

1 comment:

Anonymous said...

fantastic post, very informative. I'm wondering why the opposite specialists of this sector
don't understand this. You should proceed your
writing. I'm sure, you've a huge readers' base already!

my site epoxy flooring