18 வரம்


என் வரம்
வரம் கேட்கிறது என் விழியோரம்
தவமிருக்கிறேன்
விலகிவிடக்கூடாதே என்ற தவிப்போடு

என் உறக்கம்
உறங்குகிறது என் மார்மீது
விழித்திருக்கிறேன்
கலைந்துவிடக் கூடாதே என்ற கவலையோடு

என் உயிர்
உயிர்க்கிறது என் உதட்டோடு
உறிஞ்சுகிறேன்
துளி அமுதும் சிந்திவிடக் கூடாதே
என்ற அக்கறையோடு

என் சொர்க்கம்
சுரக்கிறது என் மடிமீது
சிலிர்க்கிறேன்
என் இதயம் நின்றுவிடக் கூடாதே
என்ற பதட்டத்தோடு

என் நதி
நீர் கேட்டு என் வாய்க்கால்களில்
நீந்துகிறேன்
நிஜம்தானா என்று என்னைக்
கிள்ளிப் பார்த்துக்கொண்டே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

சாந்தி said...

என் சொர்க்கம்
சுரக்கிறது என் மடிமீது
சிலிர்க்கிறேன்
என் இதயம் நின்றுவிடக் கூடாதே
என்ற பதட்டத்தோடு

சொல்லாடல் இனிமை.



என் நதி
நீர் கேட்டு என் வாய்க்கால்களில்
நீந்துகிறேன்
நிஜம்தானா என்று என்னைக்
கிள்ளிப் பார்த்துக்கொண்டே

அருமை.

பூங்குழலி said...

என் உயிர்
உயிர்க்கிறது என் உதட்டோடு

அருமை