***31

தீயினில் தளிராய் வாடுகிறேன்
தினமென்னை நானே தேடுகிறேன்
ஆயிரம் கூறியும் கேட்பதில்லை
ஆசைகள் அறிவிடம் தோற்பதில்லை

பாயினில் பருவம் தூங்குதில்லை
பனிபட்டும் தகிப்பு நீங்குதில்லை
நோயெனில் நூதன நோயானேன்
நீள்விழிப் பூவே நீயறிவாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: