புத்தாண்டே புத்தாண்டே

வளர வளர
நாங்களெல்லாம்
பழையவர்கள்

நீ மட்டும் எப்படி
புதியவள்?

புது நரையாய்
மூப்பு
வலுக்கட்டாயமானாலும்

இன்று
புதிதாய்ப் பிறந்தேன்
என்று
உன்னோடு நானும்
கை குலுக்கும்போது

உன்னைக் குதூகலமாய்க்
கொண்டாடுகிறேன்

நீ
புத்தாண்டேதான்
நான்
புதுப்பிறப்பேதான்

துளிர்ப்
புத்தாண்டின்
தளிர்
வாழ்த்துக்கள்

2 comments:

Anonymous said...

புத்தாண்டிற்கு வாழ்த்தினால் வயதொன்று கூடும்

அன்புடன் ..... செல்வி ஷங்கர்

Anonymous said...

படமும் கவிதையும் அருமை புகாரி...

ச்சோஓ ச்வீட்ட்ட் குழந்தை...:)

அன்புடன்...
வாணி