நிழலோடு நிழலாய்


நிழலைத் தேடி
ஓடும் ஓட்டம்
இருளில் நின்று
தேம்பியே விம்மும்

பகலில் நிழலும்
தெளிவாய்த் தோன்றும்
இரவில் தேட
உயிரே நடுங்கும்

கனவின் காலில்
விலங்குகள் இல்லை
நினைவின் முதுகில்
சுமைகளும் இல்லை

நிஜத்தை நினைத்து
நிம்மதி இல்லை
விலகிப் போக
விருப்பமும் இல்லை

No comments: